என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அழுதும், கெஞ்சியும் ‘சீட்’ வாங்கியவர்கள் மானத்தை பற்றி பேசுவதா? ராகுல் பேச்சுக்கு குஷ்பு பதிலடி
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மானம் உள்ள தமிழர்கள் பலர் காலில் விழமாட்டார்கள் என்று விமர்சித்தார்.
ராகுல் உண்மை தெரியாமல் பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். முதலில் அவரது கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டாரா? கூட்டணி பேசப்போகும் போது தி.மு.க. அவமரியாதை செய்வதாக வேதனைப்பட்டு பேசியது அவருக்கு தெரியவில்லை.
அழுதும், கெஞ்சியும், அத்தனை அவமானங்களையும் தாங்கி தானே 25 ‘சீட்’களை வாங்கினார்கள். இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா?
சிறிதளவேனும் மானம் இருந்து இருந்தால் அழவைத்த தி.மு.க.வோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளியே வந்திருக்க வேண்டும்.
அப்படி வந்திருந்தால் மரியாதை உள்ள கட்சி, மானம் உள்ள கட்சி என்று மக்கள் பாராட்டி இருப்பார்கள்.
ஆனால் தங்கள் தன்மானத்தை இழந்துவிட்டு தமிழர்களிடம் மானம் இருக்கிறதா? என்று கேட்டால் சிரிக்கமாட்டார்களா?
என்ன செய்வது? பாவம் ராகுல் இப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக தெரியாமல் எதையாவது பேசுவார். அவரது பேச்சுக்கு பதில் சொல்வதே நேரத்தை வீணடிப்பது போல்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்