என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
    • கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

    கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், "கலைஞர் உடல்நிலை சரியில்லாதபோது அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இப்படி சிறிய வீட்டில் இருக்கிறீர்களே. டெல்லியில் எனக்கு பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாங்க என பிரதமர் மோடி அன்று கலைஞரை அழைத்தார். ஆனால் "எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க.. அதனால் உங்கள் வீடு பத்தாது என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார். 

    • ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
    • 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார்.

    அங்கு அவர் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், கோவில் வாசலில் உள்ள டீக்கடையில் டீ அருந்தினார். பின்னர் விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உலக மக்கள் நலனுக்காக வேண்டி கொண்டேன் என்றார்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தை முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன என்றார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

    • நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.
    • இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர்.

    சென்னை:

    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கலைவாணரின் உருவச் சிலையினை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த அவரது உருவச் சிலையினைப் புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்.

    அதன்படி, சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தமிழ்த் திரைப்படத்துறையில் கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞராகத் திகழ்ந்தார்.

    தமிழில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர். இவர் உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

    இவர் சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதனால் தான் இவருக்கு, "கலைவாணர்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறு​வனம் 2024-25-ம் நிதி​யாண்​டின் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.
    • பயணக் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர பிரிவு​களில் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது.

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

    வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரெயில்கள், ரெயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது. இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.

    வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.
    • த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால் அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

    அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சியை முடக்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன அவரது வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது. கிருஷ்ணராயபுரத்தில் குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழி பெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேட்சை வேட்பாளர் கூட, தான் வெற்றி பெறுவேன் என்று கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான் த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர்தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம், பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம்.

    ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை, யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார் என்றார். 

    • புயலுக்கு பின்னர் அமைதி ஏற்படுவது போல தங்கம் விலை அதன்பின்னர் இறங்குமுகம் கண்டது.
    • தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்தது.

    சென்னை:

    மதிப்புமிக்க உலோகமான தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாகவே நிலையற்ற தன்மை காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் ஏற்றம் காண்பதும், மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதியன்று தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது.

    இது 28-ந்தேதியன்று ரூ.650 அதிகரித்து கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ரூ.5 ஆயிரத்து 200 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அதன் மறுநாளும் அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதாவது 29-ந்தேதியன்று ரூ.9 ஆயிரத்து 520 உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டிப் பிடித்தது.

    புயலுக்கு பின்னர் அமைதி ஏற்படுவது போல தங்கம் விலை அதன்பின்னர் இறங்குமுகம் கண்டது. படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று மீண்டும் தனது கோர முகத்தை காட்டியது. அதாவது நேற்று ரூ.630 உயர்ந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 900 ஆகவும், ரூ.5 ஆயிரத்து 40 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்தது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் பார் வெள்ளி 3 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    03-02-2026- ஒரு கிராம் ரூ.300

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    01-02-2026- ஒரு கிராம் ரூ.320

    31-01-2026- ஒரு கிராம் ரூ.320

    • அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
    • எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2000 மாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடனை அரசே ஏற்கும். வருடத்துக்கு 3 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

    அவர் உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவராக கூட வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் வாக்குறுதிகளை அள்ளி விட்டு செல்லலாம். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தனது 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட எதையும் செய்யாமல் இப்போது வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.

    எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள். அவ்வாறு உள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றவர் தற்போது எதற்காக கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை அ.தி.மு.க. ஆட்சியில் 9 லட்சமாக குறைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்போது பொருளாதார நிபுணர் போல பேசுகிறார். அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அ.தி.மு.க. காலத்தில் கட்டவில்லை. அந்த பணம் எங்கே போனது. எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியது ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம்தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

    ஏற்கனவே அவர் அறிவித்த 5 வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாமல் புஸ்வானமாக போய் விட்டதால் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதுவும் புஸ்வானமாகவே போய் விடும் என்றார். 

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.
    • திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்விவரம் வருமாறு:-

    * திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து ராமேசுவரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16343), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு காலை 8.05 மணிக்கும், மதுரைக்கு 9.20 மணிக்கும், மானாமதுரைக்கு 10.03 மணிக்கும், பரமக்குடிக்கு 10.23 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.48 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.15 மணிக்கும் சென்றடையும்.

    * திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16849), புதிய கால நேர அட்டவணைப்படி திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ரெயில் மானாமதுரைக்கு 9.40 மணிக்கும், பரமக்குடிக்கு 10.08 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.38 மணிக்கும், உச்சிப்புளிக்கு 10.54 மணிக்கும், மண்டபத்திற்கு 11.09 மணிக்கும், பாம்பனுக்கு 11.19 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.

    * திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56717), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல்லில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயில் அம்பாத்துரைக்கு 8.01 மணிக்கும், கொடைக்கானல் சாலைக்கு 8.10 மணிக்கும், வாடிப்பட்டிக்கு 8.20 மணிக்கும், சோழவந்தானுக்கு 8.29 மணிக்கும், சமயநல்லூருக்கு 8.39 மணிக்கும், கூடல்நகருக்கு 8.49 மணிக்கும், மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.

    * ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56714), புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் பாம்பனுக்கு 11.43 மணிக்கும், மண்டபத்திற்கு 11.53 மணிக்கும், உச்சிப்புளிக்கு மதியம் 12.10 மணிக்கும், வாலாந்தரவைக்கு 12.20 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 12.39 மணிக்கும், சத்திரக்குடிக்கு 12.46 மணிக்கும், பரமக்குடிக்கு 1 மணிக்கும், சூடியூருக்கு 1.13 மணிக்கும், மானாமதுரைக்கு 1.40 மணிக்கும், ராஜகம்பீரத்திற்கு 1.52 மணிக்கும், திருப்பாச்சேத்திக்கு 2.02 மணிக்கும், திருப்புவனத்திற்கு 2.12 மணிக்கும், சிலைமானுக்கு 2.23 மணிக்கும், மதுரை கிழக்கு ரெயில் நிலையத்திற்கு 2.35 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.05 மணிக்கும் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது.
    • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே ஏராளமானோர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்களும், தொழிலாளர்களும் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது.

    ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம்தாகூர் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

    சென்னை பூங்கா ரெயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
    • தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை.

    சேலம்:

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வருகிற சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.

    மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவோம் என்று கூறி வருகிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறி வருகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கேட்பதால் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களுக்குள் கூட்டணி குழப்பம் இருக்கிறது.

    மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. அந்த நிதியை தமிழக அரசு திரும்ப அனுப்பி உள்ளது. இது நிர்வாகத் திறமை இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா? தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இல்லையா?.

    5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 575 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 70 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை. ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாச நகர், பக்தவச்சலம் ரோடு, சேமத்தமன் நகர், இடார் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகா நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வர் நகர், விஜிபி அமுதா நகர், சிடிஎன் நகர், சாந்தா அவென்யூ, சிவந்தி அவென்யூ, ரெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, கருணேகர் தெரு.

    காரம்பாக்கம்: கந்தசுவாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.

    மாதவரம்: காசா கிராண்ட் ரெசிடென்ஷியல் டவர்.

    ×