search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பதவியை இழந்தார் பொன்முடி... அடுத்து என்ன?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பதவியை இழந்தார் பொன்முடி... அடுத்து என்ன?

    • இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 30 நாட்கள் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    தீர்ப்பு நிறுத்தி வைக்காமல் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது. தண்டனை விவகாரம் தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் என அறிவிக்கப்பட்டு அவர் போட்டியிட்ட தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

    Next Story
    ×