search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்து தர்மத்தை அவமதிக்கும் இந்தியா கூட்டணி அழியும்!
    X

    இந்து தர்மத்தை அவமதிக்கும் 'இந்தியா' கூட்டணி அழியும்!

    • இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.
    • வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    சேலம்:

    சேலம் பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    * ஆடிட்டர் ரமேஷ் பா.ஜ.க.வுக்காக கடினமாக உழைத்தவர், அவரை கொன்று விட்டனர்.

    * இந்தியா கூட்டணி மும்பையில் இந்து தர்மத்தின் சக்தியை அழிக்க வேண்டும் என்று பிரகடனம்

    * இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.

    * காங்கிரஸ், திமுக கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?

    * இந்தியா கூட்டணி பலமுறை இந்து தர்மத்தை அவமதித்துள்ளது.

    * வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    * பிற மதங்களை பற்றி இந்தியா கூட்டணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    * ஆனால் இந்து மதம் குறித்து பேச இந்தியா கூட்டணி ஒரு விநாடி கூட தயங்கியதில்லை.

    * பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்ததை இவர்கள் அவமதித்தார்கள்.

    * செங்கோல் இங்கிருக்கும் இந்து சமய மடங்களை குறிக்கிறது என்பதால் அதனை அவமதித்தார்கள்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்.

    * பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையை பாடினார்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும். இது மோடியின் உத்தரவாதம் என்றார்.

    மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சேலம் கோட்டை மாரியம்மன் ஆகியவற்றை சுட்டிக்காட்டி சக்தியின் பெருமையை பிரதமர் மோடி விளக்கினார்.


    Next Story
    ×