search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தோம்.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பாளையம்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்து பேசி, தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தோம். வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.

    Next Story
    ×