என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி மாலை அணிவிக்கிறார்
- நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
- தி.மு.க. முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்.
"இப்படை தோற்கின் எப்படைவெல்லும்" என்று தம்பிமார் பெரும் படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன்-"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொழிவாளர்-எழுத்து வேந்தர்-தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர்-பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 114-வது ஆண்டு பிறந்த நாள் (15-ந்தேதி) அன்று காலை 8 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி-மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 15-ந்தேதி காலை 8 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்