search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை- ஒடிசாவில் இருந்து திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    X

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை- ஒடிசாவில் இருந்து திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    • விபத்து நிகழ்ந்த பகுதியில் சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுவிட்டன.
    • 8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் சிக்கிய ரெயிலில் பயணம் செய்ததால், அவர்களுக்கு உதவும்பொருட்டு தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றனர். அந்த குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

    8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டன. இனி மின் வழித்தட இணைப்புகள் கொடுக்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் வழங்குவதற்காக பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதற்கிடையே ரெயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். காரக்பூரில் நாளையும், நாளை மறுநாளும் விசாரணையை தொடங்க உள்ளார்.

    Next Story
    ×