search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மதிப்பூதியத்தை காப்பகத்திற்கு வழங்கிய அ.தி.மு.க. கவுன்சிலர்
    X

    ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மதிப்பூதியத்தை காப்பகத்திற்கு வழங்கிய அ.தி.மு.க. கவுன்சிலர்

    • முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    சென்னை, ஆக.6-

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்த தொகையை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் காப்பகங்கள், அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.

    கவுன்சிலர் பதவி வகிக்கும் வரை உள்ள காலத்திற்கான தொகையை ஆதரவற்றவர்களுக்காக வழங்கினால் மன நிறைவுடன் உணவு சாப்பிடுவார்கள் என கருதி அத்தொகையை மாநகராட்சிக்கே திருப்பி கொடுத்துள்ளார். மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    Next Story
    ×