search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உரிமைத்தொகை திட்டம்: கவர்னர் தமிழிசை மகிழ்ச்சி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உரிமைத்தொகை திட்டம்: கவர்னர் தமிழிசை மகிழ்ச்சி

    • பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது.

    சென்னை:

    தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும் கிடைத்தால் மகிழ்ச்சியே....

    தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த உரிமைத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான்.

    முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

    ஜன்தன் வங்கிக்கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.

    பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீத பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

    கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.

    முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது. இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுகிறோம். இதுவே டிஜிட்டல் இந்தியா.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×