search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரும் 29-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது
    X

    முதலமைச்சர் ஸ்டாலின்

    வரும் 29-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது

    • சென்னையில் வரும் 29-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும்.
    • இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-1-2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.

    அதுபோது, தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் மத்திய அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×