search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது
    X

    போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது

    • வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
    • ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை-ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் (வயது 38).

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பரத்தை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.

    அதில் பேசிய சிவகங்கை மாவட்டம் டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறி உள்ளார்.

    இதை நம்பிய பசும்பொன் முத்துராமலிங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி முதல் இந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் ரூ.4 லட்சம் பணத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.

    அதனை ரகுபதி ராஜன் பெற்றுக்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதில் ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×