என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்- திருமாவளவன்
Byமாலை மலர்13 March 2022 7:38 AM GMT (Updated: 13 March 2022 7:38 AM GMT)
பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
கோவை:
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் கடந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது ஆட்சியை பிடித்திருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்து நின்றதே ஆகும்.
அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போட்டியிட்டு இருந்தால் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்காது.
எனவே பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும்.
பா.ஜனதா கட்சி மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர். இது ஒரு ஆபத்தான சூழலுக்கான அறிகுறியாகும்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பானது ஆணவ கொலைகளை தடுப்பதற்கு வழிவகுக்கும். இந்த வழக்கில் போராடிய வக்கீல் ப.பா.மோகனுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கள் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்றம் வேண்டும் என பல நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்-அமைச்சர் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் கடந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது ஆட்சியை பிடித்திருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்து நின்றதே ஆகும்.
அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போட்டியிட்டு இருந்தால் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்காது.
எனவே பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும்.
பா.ஜனதா கட்சி மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர். இது ஒரு ஆபத்தான சூழலுக்கான அறிகுறியாகும்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பானது ஆணவ கொலைகளை தடுப்பதற்கு வழிவகுக்கும். இந்த வழக்கில் போராடிய வக்கீல் ப.பா.மோகனுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கள் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்றம் வேண்டும் என பல நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்-அமைச்சர் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X