என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
துணை ஜனாதிபதி விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் வாழ்த்து
Byமாலை மலர்23 Jan 2022 6:01 PM GMT (Updated: 23 Jan 2022 8:27 PM GMT)
துணை ஜனாதிபதி வெங்கையா நாயடுவுக்கு தற்போது 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறை, விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 2-வது முறையாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தெரிவித்திருப்பதாவது:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய விழைகிறேன். மேலும், நான் துணை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X