என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்
Byமாலை மலர்15 Feb 2021 4:35 AM GMT (Updated: 15 Feb 2021 7:23 AM GMT)
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
கோவை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து அவர்களுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
அதன்படி கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 123 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண ஜோடிகளின் உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து அவர்களுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
அதன்படி கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 123 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்ச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மங்கல நாண் எடுத்து கொடுத்து 123 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர். திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்கினர்.
முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண ஜோடிகளின் உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X