என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓட்டுக்காக ஸ்டாலின் வேல் தூக்குகிறார்- எல் முருகன் தாக்கு
சேலம்:
பிப்ரவரி மாதம் 6-ந்தேதி சேலத்தில் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கான கால் கோள் விழா சேலம் கெஜல் நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் பா.ஜ.க.வின் தியாக பூமி. உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பது இளைஞர்களின் விருப்பம். பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் மாநாடுகள் நடைபெறும். மார்ச் மாதம் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடுகள் தமிழக அரசியலை புரட்டி போடும்.
பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார்.
என்னதான் இரட்டை வேடம் போட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.
பா.ஜ.க. வைத்த தைப்பூச விடுமுறை கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. ராகுல்காந்தியின் பிரசாரம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
தி.மு.க. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே உடையும் வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க.- அ.தி.மு.க .கூட்டணி பலமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து முருகன் பேசுகையில், சேலத்தில் தொடங்கும் எந்தவொரு மாநாடும் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்படிதான் ஜன சங்கம் இங்கே தொடங்கியது. அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். தமிழகம் முழுவதும் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அதிக மானோர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். பா.ஜ.க.வில் பெரிய மாற்றத்தை காண முடிகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்