என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்
Byமாலை மலர்8 Dec 2020 7:17 AM GMT (Updated: 8 Dec 2020 7:17 AM GMT)
நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளோடு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இதன் அடிப்படையிலே விவசாய சங்கங்கள் இன்று “பாரத் பந்த்” அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்தியிலே ஆளுங்கட்சியை எதிர்க்கின்ற வகையிலே, பல எதிர்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளது.
அடிப்படையில் நம்முடைய நாடு விவசாயம் சார்ந்த நாடு. மத்திய பி.ஜே.பி அரசும், மாநில அ.தி.மு.க அரசும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
இருப்பினும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், அரியானா, போன்ற மாநில விவசாயிகளுக்கு இந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் விவசாய வழிமுறைகளுக்கு தடங்கலாக கருதியதால் அவர்களுக்கு சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் தொடர் விவசாயிகளின் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதனால் மற்ற மாநில விவசாயிகளுக்கு அச்சமும், சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே மத்திய அரசு 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தை போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளோடு ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இதன் அடிப்படையிலே விவசாய சங்கங்கள் இன்று “பாரத் பந்த்” அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்தியிலே ஆளுங்கட்சியை எதிர்க்கின்ற வகையிலே, பல எதிர்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளது.
அடிப்படையில் நம்முடைய நாடு விவசாயம் சார்ந்த நாடு. மத்திய பி.ஜே.பி அரசும், மாநில அ.தி.மு.க அரசும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
இருப்பினும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், அரியானா, போன்ற மாநில விவசாயிகளுக்கு இந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் விவசாய வழிமுறைகளுக்கு தடங்கலாக கருதியதால் அவர்களுக்கு சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் தொடர் விவசாயிகளின் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதனால் மற்ற மாநில விவசாயிகளுக்கு அச்சமும், சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே மத்திய அரசு 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தை போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X