என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
’நடராஜனின் வெற்றி பயணம் தொடர வேண்டும்’ - விஜயகாந்த் வாழ்த்து
Byமாலை மலர்2 Dec 2020 6:27 PM GMT (Updated: 2 Dec 2020 6:27 PM GMT)
சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;-
சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்
தமிழக வீரர் நடராஜன் தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன், இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நடராஜனின் வெற்றி பயணம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X