search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா தொடர்"

    இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார் என்று கேப்டன் விராட் கோலி கூறினார். #AUSvIND #ViratKohli #Dhoni
    மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு சிறந்த ஆடுகளம் அல்ல. அதனால் நிலைத்து நின்று ஆட வேண்டியிருந்தது. கடைசி கட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும், டோனி, ஜாதவ் ஜோடியினர் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டனர். டோனியை நினைத்து ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் இந்த தொடரில் கணிசமான ரன்கள் எடுத்து இருக்கிறார். எப்போதும் ரன் குவிக்கும்போது, அது பழைய நிலைக்கு திரும்பி, நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம்.



    இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் வீரர். அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும்’ என்றார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில், 4-வது பேட்டிங் வரிசையில் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். நாம் எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறோம் என்பதை விட அணியின் சமச்சீர் தன்மை மாறக்கூடாது. அது தான் முக்கியம். பேட்டிங்கில் நான் எந்த வரிசையிலும் களம் காண தயாராக இருக்கிறேன். மீண்டும் 5 அல்லது 6-வது வரிசை என்றாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.

    14 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்ட நிலையில், இப்போது 6-வது வரிசையில் இறங்க மாட்டேன் என்றோ, 4 அல்லது 5-வது வரிசை தான் தேவை என்றோ கூற முடியாது. அணிக்கு எந்த வரிசையில் நான் தேவைப்படுகிறனோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவேன்’ என்றார். #AUSvIND #ViratKohli #Dhoni

    புவனேஸ்வர் குமார் VS ஆரோன் பிஞ்ச் இடையிலான மோதலில் புவனேஸ்வர் குமார் மூன்று முறையும் ஆரோன் பிஞ்ச்-ஐ வீழ்த்தி அசத்தினார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. பொதுவாக ஒரு தொடர் தொடங்குவதற்குமுன் இரண்டு பேரை ஒப்பிட்டு, அதில் ஜெயிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு கிளம்பும்.

    அப்படித்தான் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்தை ஆரோன் பிஞ்ச் எதிர்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை சமாளித்து விட்டால், அதன்பின் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் புவேனஸ்வர் குமார் புதிய பந்தில் தனது ஸ்விங் திறமையால் ஆரோன் பிஞ்ச்-ஐ நடுங்க வைத்துவிட்டார்.

    சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார்.

    இன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பந்தை சந்திக்க திணறிய ஆரோன் பிஞ்ச், க்ரீஸை விட்டு அதிக அளவு முன்னாள் வந்து தடுத்தாடினார். இரண்டு முறை ஸ்லிப் திசையில் பந்து எட்ஜ் ஆகியது. ஆனால் தப்பிவிட்டார்.



    அதன்பின் புவனேஸ்வர் குமாரின் முதல் ஸ்பெல்லின் கடைசி பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்கினார். இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டானார். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தியும் பலனில்லை. இதனால் 24 பந்துகளை சந்தித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தனார்.

    இந்தத் தொடரில் ஆரோன் பிஞ்ச் புவனேஸ்வர் குமார் வீசியதில் 37 பந்துகளை சந்தித்தார். இதில் 30 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 7 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 முறையும் அவுட்டாகியுள்ளார்.
    எந்த இடத்தில் களம் இறக்க அணி விரும்பினாலும், மகிழ்ச்சியாக களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். #AUSvIND #MSDhoni
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. டோனி 87 (அவுட்இல்லை), கேதர் ஜாதவ் (61 அவுட்இல்ல), விராட் கோலி (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விராட் கோலியுடன் இணைந்து 54 ரன்கள் சேர்த்த டோனி, கேதர் ஜாதவ் உடன் இணைந்து 121 ரன்கள் குவித்தார். மூன்று போட்டியிலும் அரைசதம் விளாசிய டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    முதல் இரண்டு போட்டிகளில் 5-வது வீரராக களம் இறங்கிய டோனி, இந்த ஆட்டத்தில் 4-வது வீரராக களம் இறங்கினார். அணி எந்த இடத்தில் களம் இறங்க விரும்புகிறதோ, அந்த இடத்தில் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து டோனி கூறுகையில் ‘‘நம்பர் 4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.

    இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் ‘ஸ்லோ’வானது. ஆகவே, விரும்பிய போதெல்லாம் ஹிட் ஷாட் அடிப்பது கடினம். இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்பது முக்கியம் என்று நினைத்தேன். ஏனென்றால், முக்கியாமான பந்து வீச்சாளர்கள் அவர்களது 10 ஓவர்களை முடிக்க வேண்டும். கேதர் ஜாதவ், கிரிக்கெட்டிற்கு தொடர்பிள்ளாத அன்ஆர்தோடாக்ஸ் (unorthodox) ஷாட்ஸ் மூலம் பவுண்டரிகள் விளாசினார்’’ என்றார்.
    மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது.

    ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

    36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    இதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது.

    இதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

    டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். #MSDhoni
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் மகேந்திர சிங் டோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இந்த தொடருக்கு முன் டோனியின் பினிஷிங் திறமை குறைந்துவிட்டது என விமர்சனம் கிளம்பியது.

    ஆனால் டோனி விமர்சனம் குறித்து கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (0), விராட் கோலி (1), அம்பதி ராயுடு (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் டோனி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 129 பந்தில் 133 ரன்கள் சேர்த்தார். டோனி 96 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரனகள் எடுத்து 34 ரன்னில் தோல்வியை சந்தித்தது. டோனி கூடுதலாக 45 பந்துகளை சந்தித்ததே தோல்விக்குக் காரணம் என விமர்சனம் எழும்பியது.

    அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 43 ரன்னிலும், தவான் 31 ரன்னிலும், அம்பதி ராயுடு 24 ரன்னிலும் ஆட்டமிழக்க 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    விராட் கோலி 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை டோனி சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 55 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார்.

    மெல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா (9), தவான் (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி - டோனி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து டோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவை வழி நடத்திய டோனி சிறப்பாக விளையாடி 74 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    அடிலெய்டு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தோடு ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் நடால் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  2-வது போட்டி அடிலெய்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணி மெல்போர்ன் வந்தடைந்தது. அப்போது ஓய்வு நேரத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நடால் - மேத்யூ எப்டன் மோதிய 2-வது சுற்று ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இதில் நடால் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    நடால் போட்டியை பார்த்த போட்டோவை ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    அடிலெய்டில் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என அணி விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி - டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 112 பந்தில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்திருந்தது. 38 பந்தில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அப்போது டோனி 34 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

    தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். டோனி 20 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்குப்பின் நிருபர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தன்னை 6-வது இடத்தில் களம் இறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டோனி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்டு இன்னிங்ஸ் போன்று அவர் ஏற்கனவே பலமுறை விளையாடியுள்ளார். ஆகவே. டோனி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிப்பதை பார்க்க சிறப்பாக இருந்தது. நெருக்கடியை புரிந்துகொண்டு, சரியான நேரம் வரும்போது எதிரணிக்கு பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். இதுதான் எப்போதும் அவருடைய பலம். அடிலெய்டு போட்டி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

    அவருடைய திட்டம் அவருக்குத் தெரியும். என்னுடைய திட்டம் எனக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருந்தோம். இன்னும் 10 ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படி ரன்கள் அடிப்பது என்று டோனி நினைக்கவில்லை. ஆனால், தற்போது பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார் என்பது குறித்துதான் யோசித்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பந்தை வெற்றிகரமாக தூக்கியடித்தால் போதும் என்று எனக்கும் டோனிக்கும் தெரியும். அதனால் நாங்கள் நெருக்குடிக்குள்ளாகவில்லை. எங்களை ஒரு பந்தை கூட தூக்கி அடிக்க விடக்கூடாது என்ற நெருக்கடி பந்து வீச்சாளருக்குத்தான் இருக்கும். ஒரு தவறு செய்தால், அதை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கெள்வோம். அப்படித்தான் டோனி முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.



    போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கான திறமை மிக முக்கியமானது. போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஏராளமான அனுபவங்கள் உதவும். கிரிக்கெட் போட்டியில் மிகவும் கடினமான திறமை அது. போட்டியை வெற்றிகரமாக முடிக்கும்போது, அணியின் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பு.

    அணி நிர்வாகம் தற்போது போட்டியை வெற்றிகரமாக முடிப்பதுதான் வேலை என்று என்னிடம் கூறியுள்ளது. என்னால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை அணி விரும்புகிறது. அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் என்ன நினைக்கிறார்களோ? அதை என்னால் முடிந்த அளவிற்கு அளிக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    அடிலெய்டில் நாளை நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.



    தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார்.



    முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.



    நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லை 7-வது இடத்தில் களம் இறக்குவது வேஸ்ட் என ஆரோன் பிஞ்ச் மீது பார்டர் குற்றம்சாட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் 7-வது வீரராக களம் இறங்கினார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 11 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல்லை 7-வது வீரராக களம் இறக்குவது வேஸ்ட் என்று ஆரோன் பிஞ்ச் மீது ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘மேக்ஸ்வெல் 7-வது இடத்தில் களம் இறங்குவது வேஸ்ட் என நான் உணர்கிறேன். மேக்ஸ்வெலால் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட முடியாது என்றாலும், சிறப்பான தொடக்கம் கொடுத்தால், சூழ்நிலைக்கு ஏற்ப 3-வது இடத்தில் அவரை களம் இறக்கலாம்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை சதம் அடித்து, போட்டியை வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். #RohitSharma
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்தது. பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 பந்தில் 133 ரன்கள் விளாசினார்.

    ரோகித் சர்மா சதம் அடித்தாலும் இந்தியாவின் மற்ற வீரர்கள் சொதப்பிய காரணத்தால் 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் இதற்கு முன்பு மூன்று சதங்கள் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் நான்கு சதங்களாகும். இந்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார்.

    2015-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 138 ரன்கள் குவித்திருந்தார். 2016-ல் பெர்த்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே வருடத்தில் பிரிஸ்பேன் ஆட்டத்தில் 124 ரன்களும், தற்போது சிட்னி டெஸ்டில் 133 ரன்களும் அடித்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 3 போட்டியிலும் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
    ×