search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் சோமல மண்டலம் பொதலகுன்ட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னிகிருஷ்ணா. கட்டிட தொழிலாளி. இவர் கே.வி.பள்ளி மண்டலம் கொத்தபள்ளியில் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார் இவருடன் மேலும் 2 பேர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சின்னிகிருஷ்ணா மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கே.வி.பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்மோகன் விரைந்து சென்று சின்னி கிருஷ்ணாவின் உடலை கே.வி.பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×