என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணாபுரம் அருகே செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
Byமாலை மலர்2 Oct 2020 7:26 AM GMT (Updated: 2 Oct 2020 7:26 AM GMT)
வாணாபுரம் அருகே செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும் நாதஸ்ஸ்ரீ (வயது 14), பிரித்தி (13), பத்மஸ்ரீ (11) ஆகிய 3 மகள்களும், யோகேஸ்வரன் (9) என்ற மகனும் உள்ளனர். நாதஸ்ஸ்ரீ அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் பிரித்தி, பத்மஸ்ரீ, யோகேஸ்வரனும் படித்து வருகின்றனர்.
நாதஸ்ஸ்ரீ கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பொறுமையாக வாங்கித் தருகிறேன் என்று கூறி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பார்த்து வா என்று அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற நாதஸ்ஸ்ரீ தனக்கு செல்போன் வாங்கி கொடுக்காத விரக்தியில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாதஸ்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X