என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் முத்தையாபுரத்தை சேர்ந்த தாம்சன் இமானுவேல் (24). இவருக்கும் கோவில் பிள்ளை நகரை சேர்ந்த ராஜவேல் என்ற இஸ்ரவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கபில்தேவ் மற்றும் அவரது உறவினர் இமானுவேல் ஆகியோர் நேற்று நள்ளிரவு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜவேலுக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜவேல் மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்ட முயன்றனர்.
அப்போது இமானுவேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் கபில்தேவை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக இமானுவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கபில்தேல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்