என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெறிச்செயல்"
- கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்
- பெட்டவாய்த்தலை அருகே கணவர் மீது கொதிக்கும் நீரை மனைவி ஊற்றினார்
திருச்சி,
திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை பனங்காவிரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற மகாமுனி (வயது 55 ). லாரி டிரைவரான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பக்கவாதம் தாக்கியதில் அவரது ஒரு கை, கால் செயலிழந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.இவருக்கு உஷா (37) என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இதற்கிடையே உஷாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் அடிக்கடி மகாமுனி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதை பார்த்து மன வேதனை அடைந்த மகாமுனி மனைவியை கண்டித்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு மூண்டது. பின்னர் அவர்கள் இரவு படுத்து தூங்கினர். அதிகாலையில் உஷா எழுந்தார். ஆனால் கணவர் மீதான கோபம் அவருக்கு தீரவில்லை. இந்த நிலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் உடல் மீது ஊற்றியுள்ளார். இதில் அவரது இடுப்பு பகுதி வெந்து விட்டது. இதில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட கணவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்