என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வியாபாரி கைது
Byமாலை மலர்18 July 2020 8:36 AM GMT (Updated: 18 July 2020 8:36 AM GMT)
தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தக்கலை அருகே திக்கணங்கோடு, அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் ராஜமூர்த்தியை (வயது 38) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடையிலும், வீட்டிலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ராஜமூர்த்தி வீட்டை சோதனையிட்ட போது, அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரி ராஜமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தக்கலை அருகே திக்கணங்கோடு, அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் ராஜமூர்த்தியை (வயது 38) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடையிலும், வீட்டிலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ராஜமூர்த்தி வீட்டை சோதனையிட்ட போது, அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரி ராஜமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X