என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thuckalay
நீங்கள் தேடியது "Thuckalay"
தக்கலை அருகே வீட்டிலிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்துடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி மற்றவிளை பகுதியைச் சேர்ந்தவர் கோலப்பா பிள்ளை. இவரது மகள் பவானிஸா (வயது 21). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
பவானிஸாவுக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் வருகிற 27-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் பவானிஸாவின் தந்தையும், அவரது உறவினர்களும் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பவானிஸா திடீரென மாயமானார். அவர் மாயமாகும் போது வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகையையும், ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தையும் எடுத்துச் சென்று இருந்தார்.
மாயமான பவானிஸாவை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பவானிஸாவின் தந்தை கோலப்பா பிள்ளை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த எனது மகள், 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு வழக்குப்பதிவு செய்து மாயமான பவானிஸாவை தேடி வருகிறார். #Tamilnews
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி மற்றவிளை பகுதியைச் சேர்ந்தவர் கோலப்பா பிள்ளை. இவரது மகள் பவானிஸா (வயது 21). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
பவானிஸாவுக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் வருகிற 27-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் பவானிஸாவின் தந்தையும், அவரது உறவினர்களும் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பவானிஸா திடீரென மாயமானார். அவர் மாயமாகும் போது வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகையையும், ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தையும் எடுத்துச் சென்று இருந்தார்.
மாயமான பவானிஸாவை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பவானிஸாவின் தந்தை கோலப்பா பிள்ளை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த எனது மகள், 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு வழக்குப்பதிவு செய்து மாயமான பவானிஸாவை தேடி வருகிறார். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X