என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்
Byமாலை மலர்16 Jan 2020 4:34 PM GMT (Updated: 16 Jan 2020 4:34 PM GMT)
திருச்சியில் இளம்பெண்ணை 2 வாலிபர்கள் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள விசுவாச நகரில் ஒரு பெட்ரோல் பங்கு உள்ளது. இதற்கு எதிரே அடர்ந்த முள்காடு உள்ளது. இங்கு சரக்கு ஆட்டோக்கள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இருட்டான இந்த பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருக்காது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் மிகவும் சோர்வான நிலையில் அங்கு உள்ள ஒரு செராமிக்கடை அருகில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கே வந்த காவலாளி அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
அப்போது அந்தப்பெண் தன்னை இரண்டு வாலிபர்கள் இங்கே அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாகவும் இதில் தனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமாக இருப்பதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காவலாளி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட அந்தப்பெண் லிடியா என்று தெரியவந்தது. திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நின்ற அந்தப் பெண்ணை நேற்றிரவு பத்து முப்பது மணிக்கு இரண்டு வாலிபர்கள் சரக்கு ஆட்டோவில் ஏற்றி அந்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
பிறகு அந்த பெண்ணை ஆட்டோவில் வைத்து கற்பழித்துள்ளனர். அப்போது அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பயந்துபோன அந்த வாலிபர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் யாரென போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வாலிபர்களின் அடையாளங்களை லிடியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கண்காணிப்பு கேமராவில் நேற்றிரவு ஆட்டோவில் அவர்கள் லிடியாவை அழைத்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். திருச்சியில் இளம்பெண் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X