search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

    24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அஞ்சலி

    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வருகிற 24-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து பிரிவு பிரதிநிதிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×