என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பலத்த மழை - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
Byமாலை மலர்2 Dec 2019 9:00 AM GMT (Updated: 2 Dec 2019 9:00 AM GMT)
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூந்தமல்லி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி தற்போது 913 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 651 மில்லியன் கன அடியாக இருந்து கன மழை காரணமாக 3 நாட்களில் 262 மி.கன அடி தண்ணீர் அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது 11.20 அடி நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதே போல் பூண்டி ஏரிக்கு 2925 கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 440 கன அடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 2161 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி தற்போது 913 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 651 மில்லியன் கன அடியாக இருந்து கன மழை காரணமாக 3 நாட்களில் 262 மி.கன அடி தண்ணீர் அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது 11.20 அடி நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதே போல் பூண்டி ஏரிக்கு 2925 கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 440 கன அடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 2161 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X