search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் ஏரி"

    • கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 797 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி அனைத்து குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 627 மி.கனஅடி (8.6 டி.எம்.சி)தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 717 மி.கனஅடி (9.7டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைவாகவே உள்ளது.

    எனினும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீர் இன்னும் பெறவில்லை. எனவே வரும் மாதங்களில் கிருஷ்ண நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் தற்போது 452 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சோழவரம் ஏரியில் இருந்து 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தற்போது 2505 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 189 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2166 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 303 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்கு 137 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 456 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடி நீர்ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக உள்ளது.
    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 சதவீதமாக சரிந்து உள்ளது. 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 931 மில்லியன் கனஅடிதண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும். ஏற்கனவே கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 745 மி.கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2404 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645மி.கனஅடியில் 3064 மி.கனஅடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில்465 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

      பூந்தமல்லி:

      சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

      இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில்3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      • சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று.
      • மிச்சாங் புயல் காரணமாக கரை உடைந்ததாக செய்திகள் வெளியாகின.

      புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

      புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும்.

      இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

      கடந்த சில நாட்களாக மிச்சாங் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

      அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

      இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

      இவ்வாறு செயற்பொறியாளர்,நீவது., கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், திருவள்ளூர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

      • புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
      • ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.

      மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

      புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

      பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

      பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

      இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

      திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

      ஆவடி - 28 செ.மீ.

      சோழவரம் - 20 செ.மீ

      பொன்னேரி -19 செ.மீ

      செங்குன்றம் - 17 செ.மீ

      தாமரைப்பக்கம் - 17 செ.மீ

      கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ

      ஊத்துக்கோட்டை - 15 செ.மீ

      திருவள்ளூர் - 15 செ.மீ

      பூந்தமல்லி - 14 செ.மீ

      ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ

      திருத்தணி - 12 செ.மீ

      பூண்டி - 12 செ.மீ

      திருவாலங்காடு - 10 செ.மீ

      பள்ளிப்பட்டு - 6 செ.மீ

      ஆர்கே பேட்டை - 4 செ.மீ

      • பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது.
      • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

      செங்குன்றம்:

      தொடர்மழை காரணமாக புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 522 கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று காலை 1276 கனஅடியாக உயர்ந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் தற்போது 18.78 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 2,767 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

      இதேபோல் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 32 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2241 மி.கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 890 கனஅடி தண்ணீர் வருகிறது. 612 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
      • பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.

      'மிச்சாங்' புயலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

      இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

      இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வருகிறது. 3-வது நாளாக ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.27 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 522 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி அகும். இங்கு தற்போது நீர்மட்டம் 16.65 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 370 கன அடி தண்னீர் வருகிறது.

      இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

      • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
      • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

      சென்னை:

      சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

      சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

      இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

      இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

      இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

      ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

      அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

      இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

      இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

      செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

      நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

      இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

      இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

      மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

      இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

      குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

      வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

      அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

      விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

      இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

      • மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
      • மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

      சென்னை:

      இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

      சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

      * மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் யானைக்கவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

      * சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

      * மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 044-25619204, 044-25619206, 044-25619207 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

      * சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044- 45674567 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1916 ஆகிய எண்களை கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      * சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், மயிலாப்பூர் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

      * மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை கோடம்பாக்கம் அருகே ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கினாலும் போக்குவரத்து வழக்கும்போல் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

      * கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

      • 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது.
      • புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

      வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

      இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

      21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

      உயரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

      இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கன அடியாக உள்ளது.

      • கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
      • புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது.

      திருவள்ளூர்:

      சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

      சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

      கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

      புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.

      ×