என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvallur rain"
- டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 1500 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மேலும் முதலில் மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னத்தின் வேகம் தற்போது குறைந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கரை நோக்கி நகர்கிறது.
இதனிடையே மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மழைக்கான அறிகுறி இல்லாத நிலையில், திருவள்ளூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சில மணி நேரமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் நிச்சயமாக மழை பெய்யும். ஆனால் சென்னை நகரம் குறைந்தபட்சம் 100 மிமீ கனமழையைப் பெறுமா என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கான விடைக்காக நாம் இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் சென்னை-திருப்பதி சாலையில் 18 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. கிராம பகுதிகளில் 30-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சரிந்தன.
இதனால் திருவள்ளூரை சுற்றியுள்ள அரண் வாயில், அரண்வாயில் குப்பம், திருவூர்மணவாள நகர், வேப்பம்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. மின்கம்பங்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
மின் கம்பங்களை சரி செய்து மின் இணைப்பு கொடுக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, 3-வது நாளாக நேற்றும் இந்த கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யவில்லை.
இரவிலும் மின்சாரம் வராததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இரவில் நடந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 6 மணியளவில் மேகம் திரண்டு ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வில்லிவாக்கம், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, பிராட்வே, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
இதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, அம்பத்தூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 83 மி. மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:-
திருவள்ளூர் - 83
திருத்தணி - 81
அம்பத்தூர்- 80
பூண்டி- 74
பூந்தமல்லி - 57
செம்பரம்பாக்கம் - 47
திருவாலங்காடு- 47
ஊத்துக்கோட்டை- 45
தாமரைப்பாக்கம்- 38
கும்மிடிப்பூண்டி - 33
பொன்னேரி - 31
ஆர்கே பட்டு - 30
செங்குன்றம் - 22
சோழவரம்-22
பள்ளிப்பட்டு 17






