search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சேலம் பள்ளப்பட்டியில் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

    சேலம் பள்ளப்பட்டியில் வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் பின் பகுதியில் அடர்ந்த முட் செடிகள் அடங்கிய காடு உள்ளது.

    இந்த முட்செடிகள் இடையே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்த படி முகம் சிதைந்த நிலையில் இன்று காலை இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 1000 அடி தூரத்திற்கு ரத்தக்கறை படிந்துள்ளதால் அவரை ஓட ஓட விரட்டி முகத்தில் கல்லால் தாக்கி அந்த கொடூரமாக கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் யார்? என்பதை அடையாளம் காணும் வகையில் கடந்த 2 நாட்களில் அந்த பகுதியில் மாயமானவர்கள் பட்டியலை தயாரித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×