என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
Byமாலை மலர்21 Oct 2019 6:48 AM GMT (Updated: 21 Oct 2019 7:20 AM GMT)
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி கூறினார்.
சென்னை:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார். திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.
இன்று காலையிலும் மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட் டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 33 மி.மீ. மழையும், புழல் ஏரியில் 28 மி.மீ. மழையும், சோழவரம் 30 மி.மீட்டரும், பூண்டி ஏரியில் 6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார். திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.
இன்று காலையிலும் மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X