search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உவரி அருகே பலாத்காரம் செய்து பள்ளி மாணவி படுகொலை - வாலிபரை பிடித்து விசாரணை

    உவரி அருகே பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் வினிஸ்டன். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 குழந்தைகள்.

    அவர்களது 4-வது குழந்தை இளவரசி (வயது12). இவள் அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இளவரசி நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வெளியில் விளையாட சென்ற அவர் மாயமானார்.

    வினிஸ்டனின் சகோதரர் மற்றும் உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் இளவரசி அங்கு சென்றிருப்பார் என அவரது குடும்பத்தினர் கருதினர். ஆனால் நேற்று காலை இளவரசி வராததையடுத்து அவளது பெற்றோர் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று கேட்டனர்.

    அப்போது இளவரசி அங்கு வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை அவளது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வினிஸ்டனின் வீட்டிற்கு அருகே உள்ள திருத்துவம் என்பவரது வீட்டு வளாகத்தில் காம்பவுண்ட் சுவர் அருகில் சிறுமி இளவரசி பிணமாக கிடப்பது நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    மேலும் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. அவளை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து உவரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரிகரன் பிரசாந்த் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு நின்று கொண்டது.

    பின்பு சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் நகக்கீறல்கள் மற்றும் ரத்த காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருப்பது உறுதியாகி உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கூட்டப்பனை பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பெயரில் பிடித்து சென்றனர். அவர்களில் ஒருவரை விடுவித்தனர். மற்றொருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கூட்டப்பனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×