search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி"

    • எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
    • மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

    இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

    இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
    • ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

    இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.

    இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.

    கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

    இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.

    இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

    • மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.
    • தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது.

    கோவை:

    கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரம் பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் மாவட்ட முதன்மை கல்லி அதிகாரியை நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

    நான் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவள். துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில் எங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியை என்னிடம் அடிக்கடி மதரீதியாக விரோதம் காட்டி வருகிறார்.

    மேலும் அவர் என்னை நேரில் வரவழைத்து அவரது செருப்பை துடைக்க சொல்லி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து விட்டேன். எனவே ஆத்திரம் அடைந்த ஆசிரியை என்னை அவதூறாக பேசி தாக்க பாய்ந்தார். மேலும் என் தந்தை செய்யும் தொழில் குறித்து அவதூறாக பேசி ஏளனம் செய்தார்.

    இது என்னை வெகுவாக பாதித்தது. மேலும் எனது கல்வித்திறனும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நான் இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் நேரடியாக புகார் அளித்தேன். ஆனாலும் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மாணவி புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது. எதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. புகாரில் குறிப்பிட்டது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நிகழவில்லை என்றார்.

    • வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.
    • பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    நாகர்கோவில் :

    தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு கல்வி அமைச்ச கத்தின் மூலம் "கலா உத்சவ் " என்ற கலைப் பண்பாட்டுத் திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்த ப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில் நாகர்கோவில், சுங்கா ன்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். சேல த்தில் நடைபெற்ற மாநில அளவிலான பரத நாட்டியப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றார்.

    மாநில அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நடுவர்கள் பவானி. தனசுந்தரி மற்றும் ஸ்ரீமஜா ஆகியோர் முன்னிலையில் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.

    மாநில போட்டியில் வென்றதன் மூலம் ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெறும் தேசிய அள விலான போட்டியில் தமி ழ்நாடு பள்ளிக் கல்வித்து றை சார்பில் அதிதி சந்திர சேகர் பங்கேற்க உள்ளார்.சாதனை படைத்த மாணவி அதிதி சந்திரசேகரை பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    • சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
    • சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

    செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.

    இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.

    புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

    இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.

    மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.

    அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.

    நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.

    தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • வியாபாரி மீது வழக்கு
    • போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்

    குளச்சல், அக்.30-

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதி யை சேர்ந்தவர் பாலகிரு ஷ்ணன் (வயது 42). இவரது தனது தாய் நடத்தி வந்த பெட்டிக்கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து ள்ளார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்து ள்ளார். அவருக்கு மிட்டாய் கொடுத்த பாலகி ருஷ்ணன் பாலியல் தொல்லை கொடு த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். அதனைக் கேட்டு அக்கம்ப க்கத்தினர் திரண்டதால் பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவி ட்ட அவரை தேடி வருகின்றனர்.

    • மாநில அளவிலான நடன போட்டிக்கு தகுதி
    • ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு திருவிழா

    நாகர்கோவில் :

    தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் "கலாஉத்சவ்" என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைப்பண்பாட்டு திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தப் போட்டியானது பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில், நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் மாநில அளவில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி கவுரவித்தார்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகர் நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க உள்ளார். வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் அவர் மாநில அளவிலான நடன போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

    • போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

    சுரண்டை:

    தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்றது. இதில் ராஜேந்திரா விஸ்டம் நர்சரி பிரைமரி, மகரிஷி வேல்ஸ் பப்ளிக், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்,பாரத் வித்யா மந்திர், பாரத் மாண்டிசோரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக், உள்ளிட்ட 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட ராஜேந்திரன் விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளி மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார். இதே பள்ளியை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி ஒப்பித்தல் போட்டியில் 4-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ் ராம்,பள்ளி செயலாளர் சிவ டிப்ஜினிஸ் ராம் ,முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினர். அப்போது ரெயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கையை இழந்து மாணவி படுகாயமடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    • குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார்.
    • ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    குளச்சல் : 

    வில்லுக்குரியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி மாயமாகி விட்டார். இவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காதால் குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மாணவி மாயம் குறித்து குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மாயமானார்.
    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்தார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அளவிலான ஐ.பி.எல். சதுரங்க போட்டியானது பாவூர்சத்திரத்தில் உள்ள ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட் பட்டோ ருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தின் சார்பாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    ×