search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

    15ந்தேதி பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் மரியாதை

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு வருகிற 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அண்ணாவின் 111-வது பிறந்த நாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

    இதில் மாவட்ட கழக செயலாளர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்து நிலையிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×