search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் 17 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி: போதை ஆசாமி கைது

    போதையில் 17 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சோலைராஜா (வயது41). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு புறப்பட்டார். சர்ச் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அங்கு 17 வயது பெண் நின்று கொண்டிருந்தார்.

    ஆள்நடமாட்டம் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோலைராஜா அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றார். உடனே அந்த பெண் கூச்சலிட அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து சோலைராஜாவை பிடித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சோலை ராஜாவை கைது செய்தனர்.

    Next Story
    ×