என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் நகை பட்டறை ஊழியரிடம் 116 பவுன் நகை திருட்டு
கோவை:
கோவை வெரைட்டிஹாலை சேர்ந்தவர் அபினை (வயது 41). இவர் ராஜ வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். நகைகடைகள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்காக ஆர்டர் கொடுக்கும் நகைகளை கோவை மற்றும் தமிழகம் முழுவதும் செய்து கொடுப்பார்.
இவரது நகை கடையில் ரவிச்சந்திரன் என்பவர் ஊழியராக உள்ளார். சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு நகைகளை ஊழியர் ரவிசந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்.
அவர் குறிப்பிட்ட நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்தார். விற்பனை செய்ததுபோக மீதமுள்ள 116 பவுன் நகையுடன் சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டார்.
கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் வந்தபோது நகை பையை சோதனை செய்தபோது 116 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து கடை உரிமையாளர் அபினைக்கு தெரிவித்தார். அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்