என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பலூர் அருகே மருதையாற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சாத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம்-அழகேஸ்வரி தம்பதியின் மகள் சீதா (வயது 13). அதே ஊரை சேர்ந்த செல்வராஜூ-வேம்பு தம்பதியின் மகள் மஞ்சுளா (13). கந்தசாமி மகள் பிரியா (14). இவர்கள் 3 பேரும் தோழிகள் . சீதா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், மஞ்சுளா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், பிரியா 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் 3 பேரும் சாத்தனூர் குடிக்காடு கிராமத்தின் அருகே உள்ள மருதை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோர் மருதை ஆற்றில் பாலம் கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளித்தனர். பிரியா குளிக்காமல் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தண்ணீருக்குள் மூழ்கிய சீதா, மஞ்சுளா ஆகியோர் வெகுநேரமாகியும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவிக்கவே, 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சீதாவும், மஞ்சுளாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் 2பேரது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் மருவத்தூர் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்