என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன்- மனைவி பலி
Byமாலை மலர்10 Aug 2019 4:19 AM GMT (Updated: 10 Aug 2019 4:19 AM GMT)
திருச்சி அருகே காயப்போட்ட துணியை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார்கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி (25). பி.எட். படித்துள்ளார். இவர்களது வீட்டின் அருகே துணி காயப்போடுவதற்காக கம்பியால் கொடிகட்டி உள்ளனர். நேற்று காற்று அதிவேகமாக வீசியதால், அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியுள்ளது.
இதை அறியாமல் அங்கு காயப்போட்ட துணியை ஜான்சிராணி எடுத்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறி துடித்த அவரை தர்மன் காப்பாற்ற சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார்கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி (25). பி.எட். படித்துள்ளார். இவர்களது வீட்டின் அருகே துணி காயப்போடுவதற்காக கம்பியால் கொடிகட்டி உள்ளனர். நேற்று காற்று அதிவேகமாக வீசியதால், அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியுள்ளது.
இதை அறியாமல் அங்கு காயப்போட்ட துணியை ஜான்சிராணி எடுத்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறி துடித்த அவரை தர்மன் காப்பாற்ற சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X