என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் மழை - முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்22 July 2019 4:44 AM GMT (Updated: 22 July 2019 4:44 AM GMT)
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடியை நெருங்கி உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால்கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீண்ட நாட்களாக அணையின் நீர்மட்டம் 112 அடியிலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து நீர்மட்டம் 113.60 அடியாக உள்ளது.
இன்று மாலைக்குள் 114 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1273 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதன் காரணமாக வைகை அணைக்கு 144 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 28.12 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக நேற்று வரை 40 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி நீர்திறப்பு 60 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 23.2, தேக்கடி 16, கூடலூர் 15, சண்முகநதி அணை 11, உத்தமபாளையம் 2.1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கேரளாவில் பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால்கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீண்ட நாட்களாக அணையின் நீர்மட்டம் 112 அடியிலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து நீர்மட்டம் 113.60 அடியாக உள்ளது.
இன்று மாலைக்குள் 114 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1273 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதன் காரணமாக வைகை அணைக்கு 144 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 28.12 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக நேற்று வரை 40 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி நீர்திறப்பு 60 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 23.2, தேக்கடி 16, கூடலூர் 15, சண்முகநதி அணை 11, உத்தமபாளையம் 2.1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X