search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் மழை"

    • மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
    • செடியிலேயே அழுகி வருவதால் வேதனையடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையின்போது ஒட்டுசெவ்வந்தி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. 2-ம் ரக செவ்வந்தி பூக்கள் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் பெரும்பாலான செவ்வந்தி பூக்கள் செடியிலேயே அழுகி வீணானது. மேலும் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதல்ரக செவ்வந்தி ரூ.70 முதல் ரூ.80 வரையும், 2-ம் ரகம் ரூ.40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இந்த விலை பறிப்புகூலிக்குகூட பத்தவில்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    • 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. பூதப்பாண்டி, சிவலோகம், கன்னிமார், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு என அனைத்து பகுதிகளி லும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மதகுகள் வழியாக 503 கன அடி தண்ணீரும், உபரிநீராக 107 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 73.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 707 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணைக்கு 190 கன அடி நீர்வரத்து உள்ளதால் மதகுகள் வழியாக 100 கன அடியும், உபரிநீராக 129 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன.

    இதனால் இந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்ப டுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாறு, பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. எனவே அங்கு கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 15.4, பெருஞ்சாணி 22, சிற்றார் 1-15.8, சிற்றார் 2-17.8, களியல் 12.2, கொட்டாரம் 26.4, குழித்துறை 10, மயிலாடி 26.2, புத்தன அணை 17.8, தக்கலை 23.2, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.4, அடையாமடை 8, முள்ளங்கினாவிளை 29, ஆணைக்கிடங்கு 17.6, முக்கடல் 15.6, பூதப்பாண்டி 10.2, நாகர்கோவில் 23.4, ஆரல்வாய்மொழி 16.2.

    • மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன.
    • சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் வீடுகள், விவசாயக் கிணறு இடிந்து விழுந்தன.

    மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராம பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் தினமும் அந்த சாலைகளில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

    மேலும் பாசனக்கண்மாய்கள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே மழைத் தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பியது. சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து இப்பகுதியில் விளைநிலங்களில் நடவு பணிகள் தீவிரமடைந்துள் ளன.

    தொடர்மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் நான்கு வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும் நேற்று திருப்பாச் சேத்தி அருகே மாரநாடு விலக்கு பகுதியில் முத்து என்பவரது 72 அடி உயர பெரிய அளவிலான விவசாயக்கிணறு இடிந்து உள்ளே விழுந்தது.

    கிணற்றுக்குள் இருந்த இரு தண்ணீர் இரைக்கும் மோட்டார்களும் மண்ணுக் குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகே உள்ள கட்டடத்தின் தரைத்தளமும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அந்தக் கட்டி டமும் கீழே விழுந்து மண் ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது.

    மழையால் இடிந்து போன வீடுகள் உள்ளிட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மழையால் நடவுப் பணி தொடங்கியுள்ளதால் மானாமதுரை, திருப் புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க குவிந்து வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.

    நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கொல்லுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையிலான மழை அளவு பட்டியலில் திருவாரூரில் 74 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66 மில்லி மீட்டரும், குடவாசலில் 61 மில்லி மீட்டர், வலங்கைமானில் 38 மில்லி மீட்டர், மன்னார்குடியில் 50 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 58 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 62 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 15 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 476 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன.
    • கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

    திருப்பூர்:

    டிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் மழை இன்மையால் விளைச்சல் அதிகரித்தது. இதனால் ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. செடிகளின் இலைகள் தீயில் கருகியது போல் காட்சியளிக்கின்றன. செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை.

    மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு பெட்டி தக்காளி தற்பொழுது 500 ரூபாய்க்கு விலை போகிறது.வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில் தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
    • வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவிநாசி:

    வட கிழக்குப்பருவ மழை கை கொடுப்பதால், அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த அவிநாசி, மழைமறைவு பகுதியாகவே உள்ளது.

    ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வட கிழக்குப்பருவ மழை கை கொடுக்க துவங்கியிருக்கிறது.

    அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன. குறிப்பாக 2 நாள் முன் 120 மி.மீ., மழை பெய்தது விசவாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மழையால் அசநல்லிபாளையம் குளம், தாமரைக்குளம், கருவலூர் குளம் மற்றும் வெள்ளியம்பாளையத்தில் உள்ள நல்லாறு செக்டேம் ஆகியவை வேகமாக நிரம்புகின்றன. அதேபோல் பிற ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் மழைக்கு நிரம்ப துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே போன்று மழை பெய்யும் பட்சத்தில் குளம், குட்டைகள் நிரம்பி நீர் வளம் பெருகும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் குளம் குட்டைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பல குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டது. வெட்டுக்குழிகள் ஏற்படாத வகையில் மேல் மண் மட்டுமே அள்ள வேண்டும்.

    அப்போது தான் குளம், குட்டைகள் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும் என்ற நிலையில் ஆழமாக அடிமண் வரை தோண்டி எடுக்கப்பட்டதால் பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வெட்டுக்குழிகள் ஏற்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தப்பித்தவறி அதில் இறங்கினால் சேற்றில் சிக்கும் வாய்ப்புக்கூட உள்ளது.

    நீர் தேங்கியிருக்கும் குளம், குட்டைகள் அருகே, குழந்தைகள் சென்று விளையாடாத வகையிலான விழிப்புணர்வை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத்துறையினர்.

    அவிநாசியில் கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த தல வரலாறு உடைய தாமரைக்குளம், மங்கலம் ரோட்டில் உள்ளது. ஏறத்தாழ, 103 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரைக்குளம், சுற்றுவட்டார கிராமங்களில் நஞ்சை விவசாய பூமிகளுக்கு பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கோவை மாவட்டம், அன்னூரில் துவங்கி கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் வழியாக பாய்ந்து வரும் மழை நீரோட்டமானது தாமரை குளத்திற்கு வந்தடைகிறது. அதன்பின் உபரிநீராக ராஜ வாய்க்கால் வழியாக வெளியேறி ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி வழியாக நல்லாற்றில் கலந்து நொய்யலில் சங்கமிக்கிறது.

    கடந்த 2 நாள் முன் பெய்த மழையால் தண்ணீர் அதிகரித்து வர துவங்கியது. சாலையப்பாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி மதகு வழியாக உபரி நீர் தாமரைக்குளத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீர் பாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. இந்த வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நீண்ட கால பயிரான மா, தென்னை மற்றும் மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.வனத்தில் போதிய மழை இல்லாத போது, தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள விளைநிலங்களுக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தும். இதனால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும்.

    வனத்திலுள்ள சிறு ஓடைகளில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை சார்பில் இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.

    இதில் இரு வனச்சரகங்களிலும் தலா 5 தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தண்ணீர் தேவைக்காக தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வந்து செல்லும்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனத்திலுள்ள தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வருகிறது.இதனால் விளைநிலங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைந்துள்ளது. வனமும் பசுமைக்கு திரும்பி வருவதால் தாவர உண்ணிகள் அதிக தூரம் இடம் பெயராது என விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வாழைக்குளம் கண்மாய் மறுகால் பாய்கிறது.
    • கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் மலையடி வாரத்தில் உள்ள கண் மாய்கள், நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின. வாழை குளம், ரெங்கப்ப நாயக்கன் குளம், வேப்பங்குளம் ஆகிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    இதனால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து வாழைக்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும்அந்த நீரானது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய்க்கு சென்று சேருவதால் மாவட்டத்தின் பெரிய கண்மாய்களில் ஒன்றான பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
    • சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதிலேயே அவர்களுக்கு விடிந்து விட்டது. மேலும் பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. அத்துடன் ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து ஊர்ந்து சென்றன. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒரு சிலரின் மோட்டார் சைக்கிள்களில் பழுதாகி நின்றது. மேலும் சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    • பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது.
    • தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, குபப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது. அதோடு காற்றும் சுழன்று அடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடக்கின்றன. இதனால் பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து பெரும்பாறை, தடிய ன்குடிசை, குப்பம்மா ள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் வழியாக பன்றிமலைக்கு அரசு பஸ் காலை, மாலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மலைத் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்க ளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுவதும் பின்னர் ஊழியர்கள் அதனை அகற்றுவதும் நடந்து வருகிறது.

    இது மட்டுமின்றி உயர்ந்த மரங்களில் இருந்து மரக்கிளைகள் முறிந்து சாலையில் தொங்கியபடி உள்ளன. இந்த மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விடுகின்றன. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் மரக்கிளைகளை கவனிக்கா விட்டால் அவர்கள் முகத்தை பதம்பார்த்து விடுகிறது. தடியன்குடிசை யில் இருந்து குப்பம்மா ள்பட்டி வரை 13 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    இந்த மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் இது போன்று மரக்கிளைகள் அந்தரத்தில் தொங்கி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் அது போன்ற சமயங்களில் அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விருது நகர், சிவகாசி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மாவட்டத்தில் மொத்தமாக 500 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

    இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கண்மாய்களுக் கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. அவர்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செண்பக தோப்பு சாலையில் அணைத்தலை, முடங்கி ஆற்றில் நீர் நிரம்பி செல் கிறது. மறுங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக் குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முள்ளிக் கடவு, மாவரசியம்மன் கோவில், நீராவி பகுதிகளில் கனமழை பெய்ததால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ராஜபாளையம் பகுதி யில் அய்யனார்கோவில் ஆறு, பேயனாறு, முள்ளி ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆற்று நீரை கோடை கால குடிநீர் ஏரிக்கு திருப்பி விட்டு வீணாகாமல் சேமித்து வருகின்றனர். தேவதானம் சாஸ்தாகோவில் அணை நிரம்பி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் பாறை பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகி றது. பிளவக்கல் பெரியார் அணையில் 32 அடிக்கும், கோவிலாறு அணையில் 8 அடிக்கும், வெம்பக் கோட்டையில் 13 அடி அள விற்கும், கோல்வார்பட்டி யில் 11 அடி அளவிற்கும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குல்லூர் சந்தை அணையில் நீர்மட்டம் 8 அடியை கடந்து நிரம்பி வழிகிறது. சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பரளச்சி அருகே உள்ள செங்குளம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி யில் உள்ள பல்வேறு சிறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடு அதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    சுமார் 30 ஏக்கர் பரப்பள விலான மிளகாய், வெங் காயம், சோளம், உளுந்து மற்றும் மல்லி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ேமலும் 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகள், நீர்தேக்கங் களில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம் மில்லி மீட்டரில்:

    வெம்பக்கோட்டை 49.5

    கோவிலாங்குளம் 39

    அருப்புக்கோட்டை 12

    பிளவக்கல் 10.2

    ராஜபாளையம் 26

    திருச்சுழி 18.2

    ஸ்ரீவில்லிபுத்தூர் 9

    சிவகாசி 4.8

    விருதுநகர் 3

    சாத்தூர் 3

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர், அகரம், ரெட்டி யார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தையில் 10 கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் மட்டுமே தக்காளி வரத்து வந்தது.

    இதனால் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி கடைகள் குறைவாகவே இருந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.24க்கு விற்கப்பட்டது. இன்று வரத்து குறைந்ததை அடுத்து விலை உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செடியில் இருந்து காய்கள் உதிர்ந்து விட்டது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீடித்தால் மேலும் விலை உயரும் என்று தெரிவித்தனர்.

    இந்த தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×