என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் அருகே ஆசிரியர் பலாத்காரத்தால் கர்ப்பமான மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி
சேலம்:
சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி (வயது 45). இவர் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்தார்.
மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிரியருக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்