search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கர்ப்பம்"

    • மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாய் கணவரை பிரிந்து சென்றார். மாணவி அவரது தந்தையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வேலைக்கு சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுவன் மாணவியின் வீட்டிற்கு வந்து தங்கினார். தனியாக இருந்த மாணவியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியை அமுதாவும், சிவகாமியும் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்ய முயன்றுள்ளனர்.
    • மாணவியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நஞ்சை கொளாநல்லி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதில் 10-ம் வகுப்பு மாணவி 4 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

    இந்த தகவலை தனது பெற்றோரிடம் அந்த மாணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து தனது உறவினரான கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா (42), பள்ளி ஊழியர் சிவகாமி ஆகியோரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதை அடுத்து அந்த மாணவியை அமுதாவும், சிவகாமியும் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்ய முயன்றுள்ளனர். அங்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்ததால் மீண்டும் மாணவி அழைத்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை மாணவி தெரிவித்துள்ளார்.

    இதை அடுத்து மாணவி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது மாணவியை கர்ப்பம் ஆக்கிய மாணவன், மாணவனின் தாய் மற்றும் தந்தை, பள்ளி ஊழியர் சிவகாமி கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதை அடுத்து சிறுவனின் பெற்றோர், பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 3 பேரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் தலைமறைவாக இருக்கும் மாணவன் மற்றும் பள்ளி ஊழியர் சிவகாமி ஆகிய இருவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா நட்பாக பழகி வந்தார்.
    • சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சித்ரரேவு கிராமத்தை சேர்ந்த மாவீரன் மனைவி பார்வதி (வயது 45). இவருக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவரது 3வது மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா (வயது 25) என்பவர் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கூறினார். ஆனால் திருமணத்திற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க குணா, அவரது தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்களும் சேர்ந்து முயன்றுள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டாக்டர்கள் கர்ப்பத்தை கலைக்க முடியாது எனக் கூறினர்.

    இதனால் கர்ப்பத்திற்கு குணாதான் காரணம் என யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி புகாரை பெற்றுக்கொண்டு சிறுமியை சீரழித்த குணா மற்றும் உடந்தையாக இருந்த முத்துராஜ், ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
    • போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் ஐ.டி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இதையடுத்து மாணவியை, அவரது தாய் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதை கேட்டதும் மாணவியின் தாய் அதிர்ச்சியானார். இதற்கிடையே இந்த தகவல் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவியும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரும் 6-ம் வகுப்பில் இருந்து தற்போது கல்லூரி வரை ஒன்றாக படித்து வருவது தெரியவந்தது.

    நீண்ட நாள் பழக்கம் என்பதால் இவர்களது நட்பு காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்பு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது மாணவி, தனது காதலரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் காதலர், தான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகளை தெரிவித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் தற்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர் படித்து வந்தார்.
    • பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரையாம்புத்தூர் நேரு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 19). இவர் புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூ ட்ர் கிராபிக் டிசைனர் படிப்பு வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவியின் சொந்த ஊருக்கு கிருஷ்ணா வந்துள்ளார். மாணவிக்கு போன் செய்து அக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு வரவழைத்து, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிளஸ்-2 மாணவி அவரது பெற்றோருடன் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகிய கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கிருஷ்ணா மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    பிரபாகரன் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.

    அதில் எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் பிரபாகரனை கைது செய்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர்.

    தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் போக்சோ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    அப்போது விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

    விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

    • லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கோவிந்தவாடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புரசைவாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவருடன் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது.
    • மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றில் வலி ஏற்பட்டது. இதற்காக அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக தாய் அழைத்து சென்றார்.

    டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இதை கேட்ட மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் செம்பியம் அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது புரசைவாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவருடன் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. அந்த மாணவரால், மாணவி கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்தது.

    அந்த மாணவர் புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வரும் போது மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு சென்றதும் மாணவர் தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளார். மாணவியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.

    மாணவியை கர்ப்பம் ஆக்கிய மாணவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    • திண்டிவனத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக அனுபவித்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் விக்னேஷ் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக அனுபவித்தார். இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார். உடனே அந்த மாணவி விக்னேசிடம்சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் விக்னேஷ் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து அந்த மாணவி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விக்னேசை கைது செய்தார். கைதான அவர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×