search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் மாணவியை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த ஆட்டோ டிரைவர்
    X

     கைதான விக்னேஷ்

    திண்டிவனத்தில் மாணவியை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த ஆட்டோ டிரைவர்

    • திண்டிவனத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக அனுபவித்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் விக்னேஷ் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக அனுபவித்தார். இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார். உடனே அந்த மாணவி விக்னேசிடம்சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் விக்னேஷ் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து அந்த மாணவி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விக்னேசை கைது செய்தார். கைதான அவர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×