என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பள்ளியில் படிக்கும்போது காதல்: பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன்
- மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாய் கணவரை பிரிந்து சென்றார். மாணவி அவரது தந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வேலைக்கு சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுவன் மாணவியின் வீட்டிற்கு வந்து தங்கினார். தனியாக இருந்த மாணவியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார்.
இதுபற்றி அறிந்த மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்