என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்த 11 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 July 2019 2:02 PM GMT (Updated: 12 July 2019 2:02 PM GMT)
தருமபுரியில் உள்ள பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்த 11 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி நகரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்வதாக டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சில இளைஞர்கள் மாணவிகளை தங்களது காதல் வலையில் விழ வைப்பதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி முன்பும், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பும், மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதிகளிலும் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர்.
அவ்வையார் மேல்நிலைப்பள்ளி, தனியார் மகளிர் கல்லூரி ஆகிய பகுதிகளில் போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த 11 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நகரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்து வருவதாக புகார் வந்தது. மேலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைப்பதற்காக இளைஞர்கள் பள்ளி, கல்லூரி முன்பு நின்று கொண்டு தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் அவர்களை பிடிக்க இன்று காலை தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தனிப்படை போலீசார் பள்ளி, கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த இளைஞர்களை மறைந்து இருந்து மடக்கி 11 பேரை பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தருமபுரி நகரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்வதாக டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சில இளைஞர்கள் மாணவிகளை தங்களது காதல் வலையில் விழ வைப்பதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி முன்பும், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பும், மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதிகளிலும் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர்.
அவ்வையார் மேல்நிலைப்பள்ளி, தனியார் மகளிர் கல்லூரி ஆகிய பகுதிகளில் போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த 11 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நகரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்து வருவதாக புகார் வந்தது. மேலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைப்பதற்காக இளைஞர்கள் பள்ளி, கல்லூரி முன்பு நின்று கொண்டு தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் அவர்களை பிடிக்க இன்று காலை தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தனிப்படை போலீசார் பள்ளி, கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த இளைஞர்களை மறைந்து இருந்து மடக்கி 11 பேரை பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X