search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 arrested"

    • தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த நாரா யணன் மகன் சாமிநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பின ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் அங்குள்ள பகவதியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது ஒரு கும்பல் சாமிநாதனை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்க ளுடன் கடுமையாக தாக்கினர். இதில் சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது. இந்நிலை யில் சாமிநாதனை அரிவா ளால் வெட்டிய சந்தன காளை, சூரியபிரகாஷ், சந்தோஷ், பழனிக்குமார், நாக ஜெயராம், குபேந்திரன், பாண்டி, ஒண்டி, பால்பாண்டி, செந்தில், எர்ணக்காளை ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.
    • இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது. தற்போது இந்த தொழிற்சாலை பல மாதங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.இந்த இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    இன்று காலை 11 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் மினி லாரிகள் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வந்து இரும்பு பொருட்களை திருடிச் செல்வதாக சிதம்பரம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் புது சத்திரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கையும் களவுமாக 11 பேர் கொண்ட கும்பல் சுத்தி இரும்பு தொழிற்சாலையில் கைவரிசையில் ஈடுபட்ட னர். உடனே போலீசார் 17 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடலூர் மாவட்டம் அக்கரை கோரி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 50) புனேந்திரன் (38) பச்சான் குப்பம் பகுதியை சேர்ந்த மாறன் சொத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (52) முருகன் (49) அமரன் (40) வேலு (42) சேகர் (60) அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் (48) சிவலிங்கம் (45) பூபாலன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து மினி லாரி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த டிராவல்ஸ் அதிபர் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். #FakePassport #Aarrest
    சென்னை:

    சென்னையில் பெரிய அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் ஒன்று நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட் கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்கு நடத்திய சோதனையில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் கைப்பற்றப்பட்டன.

    மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். போலி இந்திய விசாவும், ரூ.85 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    சென்னை பெருங்குடியை சேர்ந்த வீரகுமார் (வயது 47), அவரது தம்பி எழும்பூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (45), செனாய்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (40), செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50), அமைந்தகரையை சேர்ந்த உமர் உசேன் (47), சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்த அம்ஜத்குமார் (36), தியாகராயநகர் கிரியப்பா சாலையை சேர்ந்த சக்திவேலு (47), கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன் (48), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47).

    டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தான் போலி பாஸ்போர்ட் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.

    பழைய பாஸ்போர்ட்களை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை நீக்கிவிட்டு, புதிதாக பாஸ்போர்ட் கேட்பவரின் புகைப்படத்தை அதில் ஒட்டி, போலி பாஸ்போர்ட்டை தயாரித்து உள்ளனர். இவர்களுக்கு உதவியாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய ஊழியர்களும் செயல்பட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இவர்கள் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்து உள்ளனர். ஒரு பாஸ்போர்ட்க்கு ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளனர். இவர்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.   #FakePassport #Aarrest #Tamilnews
    ×