search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery at the factory"

    • தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.
    • இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது. தற்போது இந்த தொழிற்சாலை பல மாதங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.இந்த இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    இன்று காலை 11 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் மினி லாரிகள் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வந்து இரும்பு பொருட்களை திருடிச் செல்வதாக சிதம்பரம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் புது சத்திரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கையும் களவுமாக 11 பேர் கொண்ட கும்பல் சுத்தி இரும்பு தொழிற்சாலையில் கைவரிசையில் ஈடுபட்ட னர். உடனே போலீசார் 17 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடலூர் மாவட்டம் அக்கரை கோரி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 50) புனேந்திரன் (38) பச்சான் குப்பம் பகுதியை சேர்ந்த மாறன் சொத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (52) முருகன் (49) அமரன் (40) வேலு (42) சேகர் (60) அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் (48) சிவலிங்கம் (45) பூபாலன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து மினி லாரி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×