என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி நாளை சென்னை வருகை
Byமாலை மலர்11 July 2019 1:47 AM GMT (Updated: 11 July 2019 1:47 AM GMT)
காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்னை வருகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்னை வருவதால் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை :
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை (வெள்ளிக்கிழமை) காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் சென்னை வருகிறார். இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
அதன்பிறகு 13-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் திருமலை செல்கிறார். அன்று இரவு மலை கோவிலில் தங்குகிறார். மறுநாள் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அன்று மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு 15-ந்தேதி காலை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
அதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12.55 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.
சென்னையில் அவர் 2 நாள் தங்குகிறார். பின்னர் 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.45 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் நடந்தது. அதில் டெல்லியில் இருந்து வந்திருந்த உயர் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை (வெள்ளிக்கிழமை) காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் சென்னை வருகிறார். இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
அதன்பிறகு 13-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் திருமலை செல்கிறார். அன்று இரவு மலை கோவிலில் தங்குகிறார். மறுநாள் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அன்று மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு 15-ந்தேதி காலை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
அதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12.55 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார்.
சென்னையில் அவர் 2 நாள் தங்குகிறார். பின்னர் 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.45 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் நடந்தது. அதில் டெல்லியில் இருந்து வந்திருந்த உயர் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X