search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலர்விழி மீரா
    X
    மலர்விழி மீரா

    என்ஜினீயரிங் மாணவி குத்திக்கொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்

    திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் சென்னை வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
    திருச்சி:

    திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவருடைய மகள் மலர்விழி மீரா (வயது 20). திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மலர்விழி மீராவை மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விசாரணையில் கத்தியால் குத்திய வாலிபர் பெயர் முரளி (34) என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. சென்னையில் வேலை பார்த்து வரும் அவர், மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்தார். காதலை ஏற்காததால் அவர் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×