என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் தங்கமணி பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது
Byமாலை மலர்13 Jun 2019 4:47 AM GMT (Updated: 13 Jun 2019 4:47 AM GMT)
தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி பற்றி பொய்யான தகவல்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை ‘வாட்ஸ்- அப்’பில் பதிவு செய்து, அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மர்மநபர்கள் பரப்பினர்.
இந்த பதிவு குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வேகமாக பரவியது. மேலும் இது அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சர் தங்கமணியை பற்றி ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் தேவி தீவிரமாக விசாரணை நடத்தினார். விசாரணையில், குமாராபாளையம் கத்தேரி பிரிவு பகுதி சுப்பிரமணியன் (வயது 54), திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த குமார்(49) ஆகியோர் ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறாக பரப்பியதாக தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு மாஜிஸ்திரேட்டு முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு, சம்பந்தப்பட்ட 2 பேரையும் 15 நாள் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியனும், குமாரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி பற்றி பொய்யான தகவல்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை ‘வாட்ஸ்- அப்’பில் பதிவு செய்து, அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மர்மநபர்கள் பரப்பினர்.
இந்த பதிவு குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வேகமாக பரவியது. மேலும் இது அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சர் தங்கமணியை பற்றி ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் தேவி தீவிரமாக விசாரணை நடத்தினார். விசாரணையில், குமாராபாளையம் கத்தேரி பிரிவு பகுதி சுப்பிரமணியன் (வயது 54), திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த குமார்(49) ஆகியோர் ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறாக பரப்பியதாக தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு மாஜிஸ்திரேட்டு முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு, சம்பந்தப்பட்ட 2 பேரையும் 15 நாள் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியனும், குமாரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X